Skip to content

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு - பேராசிரியர் தொ.பரமசிவன்

Save 5% Save 5%
Original price Rs. 90.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price Rs. 90.00
Current price Rs. 85.50
Rs. 85.50 - Rs. 85.50
Current price Rs. 85.50

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு - பேராசிரியர் தொ.பரமசிவன்

 

பிறப்பு:1950. தமிழகப் பண்பாட்டு ஆய்வாளர்களுள் முதன்மையானவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். நாட்டார் மக்களின் வாய்மொழி வழக்காறுகள், சடங்குகள், உரையாடல்களிலிருந்து ஆய்வை முன்னெடுத்தவர். சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தது.

எச்சங்களாகவும் மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருபவர். திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், ஐயா தொ.ப.

தொ.பரமசிவத்திடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும், சான்று, மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும், பழகிப் பழகி பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்/ தொடர்/ பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலை சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது என்கிறார் வரலாற்றாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.