
பௌத்தமும் தமிழும்
பௌத்தமும் தமிழும் என்னும் புத்தகத்தின் ஆசிரியராகிய மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் மேற்படி கடமையையறிந்து அவ்வாறு நடக்கும் கல்விமானாகத் தோன்றுகிறார். முற்காலத்தில் பௌத்த சமயம் தமிழ்நாட்டினுள் புகுந்து வளர்ந்து செல்வாக்கடைந்து அந்நாட்டுக்குச் சிறந்த நன்மையைச் செய்து, “பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும், இறத்தலும்” என்னும் உலக இயல்பின் வசப்பட்டுள்ள பௌத்த சமயம் அந்நாட்டினின்று கடைசியாக அழிந்துபோன வரலாறு கூறும் இப்புத்தகம் இப்போதுள்ள தமிழருக்கும் பௌத்தருக்கும் தகுதியான நூலாகும். பௌத்த சமயத்தைப் பற்றி இந்நூலின் சொல்லிய எல்லா விவரங்களும் பௌத்தர்களால் ஒப்புக்கொள்ளத்தக்க நிலையில் இருக்கின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.