வாழ்வியல் சிந்தனைகள் - 11
எனக்கே மிகப்பெரிய வியப்பு; ‘விடுதலை’ நாளேட்டின் இரண்டாம் பக்கத்தில் ‘சிறுதுளிகளாக’ பல நாட்களில் வெளிவந்த கட்டுரைகளே இவை; இன்றோ இப்புத்தகத்தைப் பார்க்கையில் - படிக்கையில் ‘பெருவெள்ளமாகவே’ - பெருக்கெடுத்து ஓடுகிறது!
காரணம் இதற்கு நமது வாசக நேயர்களிடையே கிடைத்த அபாரமான வரவேற்புதான்.
என்னை மேலும் வாழ்வியல் பற்றி சிந்திக்க வைத்தது.
கருத்து வடிவம் மட்டும் போதாது; இதன் நோக்கம் செயல் வடிவமாக படித்தபின் - அவை மாறவேண்டும். அப்போதுதான் வாழ்வியலில் ஒரு சிறந்த புதிய சாதனைகளைச் செய்யமுடியும்.
தன்னம்பிக்கை, ஆக்கபூர்வச் சிந்தனை, எளிமை எவரையும் சங்கடப்படுத்தாமல் கூடுமானவரை யதார்த்தமான அணுகுமுறையினால் நம் வாழ்வில் ஏற்படும் கசப்பான அனுபவங்களைக் கண்டு மருண்டோடுவதை, மனங்குலைவதைவிட பாடமாக எடுத்துக் கொண்டால் பக்குவம் வளரும். வெற்றி நம் கதவுகளைத் தட்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.