Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தீண்டப்படாதவர்களும் இந்துக்களும்

Sold out
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00
மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்து நடை முறைப்படுத்திய நாடுகளில் இந்தியாவிற்கு ஈடாக இன்றுவரை எந்த நாட்டையும் குறிப்பிட முடியாது. நீக்ரோ மக்களை சுரண்டிய அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளையினம் கூட ஆப்பிரிக்க அடிமைகளை தீண்டத்தகாதவர்களாக நடத்த வில்லை. தங்கள் வீட்டு வேலைகள், சமையல், குழந்தை பராமரிப்பு, உரையாடல் அனைத்திலும் அவர்களைத் தங்கள் குடும்பத்தவராகவே நடத்தினார்கள். அவர்களை ஊதியமற்ற உழைப்பாளர்களாக, விற்கவும் வாங்கவும் பயன்படும் பொருளாதாரப் பண்டமாகப் பயன்படுத்தினார்கள். அவர்களி டையே ஏற்பட்ட மண உறவால் கலப்பினமாகவும் உருவானார் கள். ஆனால் இந்திய நிலைமை அவ்வாறல்ல.

இந்திய அடிமைத்தனம் என்பது உழைப்பை மட்டும் சுரண்டுவதல்ல. எல்லாவகையிலும் ஒதுக்கி வைப்பது. அதன் முக்கியக் கருத்தியலாக இருப்பது தீண்டாமையே. உழைப்பில் ஈடுபடும் தொழிலாளரிடையே ஒருவரை ஒருவர் தொடுதல் என்பது உழைப்பு சார்ந்த தேவையாகும். ஆனால் தீண்டாதார் என்போர் உழைப்பாளர் வர்க்கத்தில் இணைந்துவிடக் கூடாது என்ற கருத்தியலை வலுப்படுத்தவே உழைப்பாளர் வர்க்கத்தி லும் அவர்கள் சமமற்றவர்களாக ஆக்கப்பட்டு எல்லா இடங் களிலும் தூரத்தில் வைக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டார் கள். இன்றைய தொழிலாளர் ஒற்றுமைக்கு இந்தக் கருத்தியல் இன்னும் இடையூறாகவே உள்ளது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.