பிணந்தின்னிகள்
அவசர நிலை காலம் என்பது அழிக்க முடியாத குறியீடு. அதன் உள்ளடக்கம் இன்றைக்கும் ஆட்சியாளர்களிடமும் காவல்துறையினரி டமும் படிந்தே கிடக்கின்றன. கிடக்கும். தோளில் கைப்போட்டுக் கொண்டே கழுத்தை நெரிக்கம் கொடுமையைப் போல் ஜனநாயகம் பேசிக் கொண்டே உரிமைகளை கொலை செய்யும் குணாம்சம் நீடிக்கவே செய்கிறது.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியதாய்’ச் சொன்ன வள்ளலார் வாழ்ந்த பூமியில் அரசு வன்முறைகள் காவல்துறை மூலம் அரங்கேறும் போது அதனை (அ)தட்டி கேட்கும் துணிச்சலை ஒவ்வொருவருக்கும் தரவல்லது இந்தப் புத்தகம். அதே வள்ளலார் சொன்னது போல ‘கருணையிலா ஆட்சி கருகி ஒழிய’ வேண்டுமென்றால் கொடுமை கொண்டு பொங்குகிறவர்களாய், நீதி கேட்க நெஞ்சு நிமிர்த்துகிறவர்களாய், அநீதிக்கு அஞ்சாதவர்களாய் அடங்காதவர்களாய், வாலிபர்களையும் மாணவர்களையும் உருவாக்கும் புத்தகம் இது.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.