
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள்
1997-&1999 ஆண்டுகளில் எம்.எஸ்.எஸ். பாண்டியனின் மூன்று கட்டுரைகள் காலச்சுவடில் வெளிவந்தன. அத்தோடு அவருடைய முதல் ஆங்கில நூலின் அறிமுகமும் அவரை ஆசிரிய ராகக் கொண்டு வெளிவந்த ‘South Indian Studies’ இதழ் அறிமுகமும் காலச்சுவடில் பிரசுரமாயின. இவற்றின் தொகுப்பு இந்நூல்.
முன்னுரை கே. சந்துரு. கண்ணனின் நினைவோடைக் கட்டுரை பின்னுரையாக இடம்பெற்றுள்ளது. பாண்டியன் இந்திய அறிவுச் சூழலிலும் உலகச் சூழலிலும் கவனம்பெறத் தொடங்கிய காலகட்டத்திலேயே அவரது எழுத்துகள் மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. பாண்டியனின் அகால மரணத்தையடுத்து அவரது நினைவைப் போற்றும் முகமாக இந்நூல் வெளிவருகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.