Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் (செ.சேகர்) வேலூர் மாவட்டம், வாலாசா வட்டம், வை.ச.மோட்டூர் செயராமன் முனியம்மாள் இணையரின் மகனாக 21.05.1959 இல் பிறந்தார். தொடக்கக் கல்வியை வை.ச.மோட்டூரிலும் உயர்நிலைக் கல்வியை வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிக் கல்வியை மேல் விசாரம் அப்துல் அக்கீம் கல்லூரியிலும் (இளம் அறிவியல் வேதியியல்) பயின்றார், பெரியார் சிந்தனைகள் மூன்று தொகுதிகளையும் முழுமையாகப் படித்த பின்னர் 1983 முதல் பெரியார் கொள்கையாளராக மாறினார். தோழர் வே. ஆனைமுத்து அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணம் மாக; 1989 முதல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தற்போது சென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - என்ற சிறப்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த ஆய்வு நூல் பாரதியாரின் மறுபக்கத்தை விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகும். கவிஞர் கருணானந்தம் எழுதியுள்ள 'பெரியார் வாழ்க்கை வரலாறு' நூலை மறுபதிப்பு செய்துள்ளார். மேலும் திராவிடர் இயக்கம் தொடர்பான பல நூல்களை மறுபதிப்புச் செய்துள்ளார். ' திராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்துக்கு தடைக்கல்லா?, படிக்கல்லா? என்றத் தலைப்பில் சிந்தனையாளன் ஏட்டில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.