மாவோ : ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்
மாவோவின் வாழ்க்கையை நாம் மறுபடியும் வாசிக்க வேண்டியது அவசியம். சீனா எனும் நாடு எப்படி செயல்படுகிறது பாருங்கள். மார்க்சிய, லெனினிய பார்வையை அது ஏற்றுக்கொண்டது. ஸ்டாலினியத்தின் அதிகாரத்துவ போக்கை விமர்சனத்துடன் உள்வாங்கிக்கொண்டது. மாவோ அளித்த சிந்தனைப்போக்குடன், உலக கம்யூனிச சிந்தனைப் போக்கையும் அது புரிந்துகொண்டு செயல்பட்டது. தனது நாட்டின் தேசிய உணர்ச்சியையும் கைவிடவில்லை. இந்த திசைவழியில்தான் அந்த நாடு தன்னை அங்குலம் அங்குலமாக வளர்த்துக் கொண்டு, இன்றைய நிலையை அடைந்துள்ளது. சீனாவைப் போலவே சுதந்திரம் அடையும்போது வளர்ச்சியடையாத, விவசாய நாடாக இருந்த இந்தியா, மாவோவின் வாழ்க்கையை மறுபடி வாசிக்க வேண்டியது அவசியம். மாவோயிச சிந்தனைகளை உள்வாங்குவது, மார்க்சியத்தை இன்றையச் சூழலுக்குப் புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியம்.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.