இரட்டை தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்
இன தேசியம், மொழி தேசியம், சாதி தேசியம் என்று தேசியம் பற்றிய கருத்துகளை வளர்த்துச் செல்வார் பேராசிரியர் ந. இரவீந்திரன். வர்க்கத்தை மட்டுமே வாழ்நிலை யதார்த்தமாகவும் இனத்தையும் சாதியையும் வெறும் கருத்துகளாகவும் பாவிக்கிற மனநிலை சிலரிடம் இருக்கும். ஆனால், இரவீந்திரனின் எழுத்துகளை வாசிப்பவர்களுக்கு சாதியும் இனமும் கருத்தாக மட்டுமல்ல, மனித இனத்தின் உயிரியல் பரிணாம வளர்ச்சியின் இயல்பான தர்க்கரீதியான வாழ்நிலையாகவும் இருக்கும். அந்த வாழ்நிலையிலிருந்து பட்டுத் தெறிக்கிற கருத்துகளாகவும் இருக்கும். இனமும் வர்க்கமும் சாதியும் பின்னிப் பிணைந்து இயங்குகிற உயிர்ப்பான ஒரு சமூக யதார்த்தத்தின் முழுமையை அவர் நமக்கு அறிமுகப்படுத்த உழைப்பார். ஒடுக்கப்படும் தேசியங்கள், ஒடுக்கும் தேசியம் என்று தேசியங்களைப் பிரித்து இன தேசியங்களுக்குள்ளே சமூக நீதியைக் காண்பார்.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.