Skip to content

பொதுவுடைமையும் சமதர்மமும் (நூல் வரிசை -17/25)

Save 50% Save 50%
Original price Rs. 8.00
Original price Rs. 8.00 - Original price Rs. 8.00
Original price Rs. 8.00
Current price Rs. 4.00
Rs. 4.00 - Rs. 4.00
Current price Rs. 4.00

பொதுவுடைமையும் சமதர்மமும் (நூல் வரிசை -17/25)

 

தந்தை பெரியாரும், தோழர் சிங்காரவேலரும் 1928இல் சந்தித்துள்ளனர். தமிழக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சந்திப்பு என்று அதனைக் கூறலாம். இருபெரும் மேதைகளாகவும், இருபெரும் புரட்சியாளர்களாகவும் விளங்கிய அவர்களின் சந்திப்பால், வர்க்கம், வருணம் என்னும் இருபெரும் தடைச் சுவர்களை இடித்துத் தமிழகம் முன்னேறுவதற்கான பாதை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் 1908ஆம் ஆண்டே ஒரு மாநாட்டில் சந்தித்துள்ளனர் என்று ஆய்வாளர் பா. வீரமணி கூறுகின்றார். எனினும் அது ஒரு சாதாரண நிகழ்வே. 1928க்குப் பிறகே இருவரும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினர். 1928-34 அவர்கள் சேர்ந்திருந்த காலம் ஆகும். அதனை நெருப்பிருந்த பனிக்காலம் என்று சொல்லலாம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.