
ரங்கோன் ராதா
ரங்கோன் ராதா,கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட, 22 அத்தியாயங்கள் கொண்ட புதினமாகும். சமூகத்தில் முக்கியமாக உள்ள பெரிய புள்ளிகளின் உண்மையான இயல்பை கதையாக எழுதியுள்ளார். பெரிய மனிதர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சமுதாயத்தை நேர்மை மனப்பான்மை கொண்ட தனிமனிதன் எதிர்க்கும் நிலையில் சந்திக்கும் இடையூறுகளையும் அண்ணாதுரை இக்கதையில் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு’ ‘விடுதலை’, ‘திராவிட நாடு’, ‘காஞ்சி; ஆகிய இதழ்களில் அண்ணா பல நாவல்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றான இந்த நாவல், சமூகத்தில் பெரிய மனிதர்களாக மதிக்கப்படுபவர்களின் உண்மையான இயல்பைத் தோலுரிக்கும் வகையில் எழுதப்பட்டது. 1956-ல் இதே தலைப்பில் சிவாஜி கணேசன் நடித்துத் திரைப்படமாகவும் வெளியானது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.