மனிதர்கள் விழிப்படையும்போது - ஆதிவாசிகள் புரட்சி
இந்தியா சுதந்திரம் அடைந்துகொண்டிருந்த 1945-47இல் நடைபெற்ற புரட்சி இது. ‘புதிய இந்தியாவுக்கான காந்தியடிகளின் லட்சியக் கனவு’தான் அப்போது மக்கள் மனதை கவ்விப்பிடித்திருந்தது. காந்தியம் போதாது என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் புரட்சி. ‘புதிய இந்தியாவுக்கான டாக்டர் அம்பேத்கரின் லட்சியக் கனவும்’ ‘மார்க்சியத்தின் லட்சியக் கனவும்‘ மக்களின் மனங்களை வெல்வதற்காகப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், மார்க்சியத்தின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக கோதாவரியும் பாருலேகரும் உயர்ந்து நின்றார்கள். சமூக மாற்றத்துக்கான பரிசோதனையாகவே அவர்கள் வார்லி ஆதிவாசிகளின் புரட்சியை வழிநடத்தியிருக்கிறார்கள். அதன் வெற்றி வலிமையான வேர்களோடு இன்றும் பசுமையாக இருப்பது சமூக ஊழியர்களுக்கான பாடம்.
கோதாவரி பாருலேகரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி டாக்டர் அசோக் தாவலே எழுதிய கட்டுரையை சொ. பிரபாகரன் தமிழாக்கம் செய்துள்ளார்.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.