நேரு சிந்தனை இலக்கும் எளனமும்:ஏ. ராசா
இந்தச் சிறு நூல் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கொடுப்பதற்கான உறுப்பு 370 உருவாக்கப்பட்ட பின்னணியையும் ; அப்போது ஜவஹர்லால் நேரு மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு ஆதரவாக வல்லபாய் படேல் இருந்தார் என்பதையும் ஆதாரங்களோடு எடுத்துக்காட்டுகிறது. காங்கிரஸுக்குள் இருந்த புருஷோத்தம தாஸ் டான்டன் போன்ற சனாதனிகளை எதிர்த்து எப்படி நேரு போராடினார் என்பதையும் இதில் ஆ.இராசா பதிவு செய்திருக்கிறார். சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் கூறிய காரணங்களில் இந்து சட்ட மசோதா நிறைவேற்றப்படாததும் ஒன்று என்பதை எடுத்துக் காட்டியிருக்கும் ஆ.இராசா அவர்கள், அதே நேரத்தில் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு எப்படி அதே சட்ட மசோதாவைப் பகுதி பகுதியாகப் பிரித்து நிறைவேற்றினார் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
| Nehru Sinthanai Ilakkum Yelanamumபுத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.