Skip to content

மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று

Save 5% Save 5%
Original price Rs. 170.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price Rs. 170.00
Current price Rs. 161.50
Rs. 161.50 - Rs. 161.50
Current price Rs. 161.50
பொது மக்களுக்கு படும் சொல்வேன் தி.மு.கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அண்ணாதான். அதற்கு நீர்பாய்ச்சி நல்ல -விளைச்சலைஉண்டாக்கியவர்கலைஞர்தான். தந்தை பெரியார்.தம்பி கருணா நிதியின் தமிழ் ஆளுந்திறன், உயர்தனி ஆற்றல் ஊரும் உலகமும் அறிந்தது தண்டவாளத்தில் தலைவைத்துப் படு என்றாலும் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும் இரண்டையும் சமமாகக் கருதுபவர்தான் என் தம்பி கருணாநிதி"பேரறிஞர் அண்ணா .தமிழகத்தின் பெருமையை சங்க காலம்போல மீண்டும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற கன் ைவ நனவாக்க விடா முயற்சியை மேற்கொண்டுள்ள சிறந்த அறிஞர் கலைஞர்.தமிழ் அரசர்களான நலங்கிள்ளி, நெடுங்கிள் ளிக்குப் பின் புலவனாகவும், அரசனாகவும் வாழ்பவர் கலைஞர்  ஒருவர்தான். -டாக்டர் மு.வரதராசனார்
முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.