என் உயிரினும் மேலான இசுலாமிய உடன்பிறப்பே! (இசுலாமிய ஃபோபியாவுக்கெதிராகக் கலைஞரின் எழுத்து)
முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1940ஆம் ஆண்டு முதலே முஸ்லிம் சமுதாயத்துடன் அரசியலுக்கு அப்பால் நல்லுறவு பேணியவர்; வஞ்சிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதே மெய்யான சமூகநீதி என்றவர்.
பாபரீ மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது அவர் தீட்டிய கட்டுரைகளும் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தபோது அவர் எழுதிய கருத்துகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இவை
அவரது உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடி.
எம்மனிதனின் நெஞ்சத்திலும் அல்லாஹ் இரு இதயங்களை வைத்திடவில்லை என்ற வான்மறை வசனத்தின் மீதான அவரது
புரிதல் வியப்புற வைக்கிறது. காலப் பொருத்தமாக, டாக்டர் கலைஞர்
நூற்றாண்டில் நின்று ஆய்வாளர் எச்.இ. அனீஸ் பாத்திமா தொகுத்தளித்த இந்நூலாக்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- மௌலானா இல்யாஸ் ரியாஜி
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.