
தந்தை பெரியாரின் சுயமரியாதைப் புரட்சி
தந்தை பெரியாரின் சுயமரியாதைப் புரட்சி - கி.வீரமணி
******
சுயமரியாதை இயக்கம் என்று தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அறிவுக்கு விடுதலை கொடுக்கின்ற இயக்கம். சுதந்திர அறிவு தரும் இயக்கம். ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கக்கூடிய இயக்கம்.
கடவுள் மறுப்பு அவருடைய நோக்கமல்ல: அடிப்படையில். மனிதன் மனிதனாக மதிக்கப்படவேண்டும் என்பதே! அந்த மனிதன் மனிதனாக மதிக்கப்படக் கூடாது என்பதற்காக குறுக்கே எவற்றையெல்லாம் இழுத்துப் போடுகிறார்களோ, அவற்றையெல்லாம் விலக்கித் தள்ளவேண்டும்-தகர்க்கவேண்டும்.
மற்றவர்கள் சொல்வது போன்று, என்னுடைய பேச்சை நம்பு, நம்பு, நம்பு என்று அவர் சொன்னது கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் தன் உரையைத் தொடங்குவதற்கு முன்பு, "நான் சொல்வதை நம்பாதீர்கள்; உங்களுடைய அறிவு என்ன சொல்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்" என்பார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.