Skip to product information
1 of 2

குறளி பதிப்பகம்

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு : புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு : புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!

Regular price Rs. 80.00
Regular price Sale price Rs. 80.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

இந்நூல் அம்பேத்கரின் சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு, பௌத்தம் மற்றும் பொருளாதார கோட்பாடு, மார்க்சியம் குறித்த அவரது வெறுப்பு நிலைப்பாடு, அரசியலமைப்பு சட்ட வரைவில் அவரது பங்கு என இவற்றில்தான் தனது ஆய்வுக் களத்தை பிரதானமாக கொண்டுள்ளது. இவை அனைத்திலும் அம்பேத்கர் முன்வைத்த முன்னுக்குப்பின் முரணான ஆய்வு முடிவுகளை, தீர்வுகளை மற்றும் அவரது தத்துவார்த்த தெளிவின்மையை அம்பேத்கரின் எழுத்துகளிலும், பேச்சுகளிலுமிருந்தே மறுக்க முடியாத ஆதாரமாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார் தோழர் ரங்கநாயகம்மா. இது சமூக மாற்றத்திற்காக அம்பேத்கரியத்தை உயர்த்தி பிடிக்கும் முன்னணியாளர்களுக்கு ஒருவகையான அதிர்ச்சியை கொடுக்கும் என்றாலும், “செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்த்திவாய்ந்த சித்தந்தாந்தமே இவ்வுலகிற்கு தேவைப்படுகிறது. அது எந்த தத்துவமாகவும் இருக்கலாம். அவர் எந்த சித்தாந்தவாதியாகவும் இருக்கலாம். நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து. ஒரு தலைவர் சொல்லும் போதனைகளில் சரியானவற்றை ஏற்றுக்கொண்டு தவறானதை நாம் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எதையுமே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று முன்னுரையிலே தோழர் ரங்கநாயகம்மா அவர்கள் கூறுவதை நாம் பக்குவத்துடன் உள்வாங்கிக் கொண்டால் அந்த அதிர்ச்சி நமக்கு தேவையில்லாத ஒன்றாகிவிடும்.

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:
செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்திவாய்ந்த சித்தாந்தமே இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறது. அந்த சித்தாந்தவாதி புத்தராகவோ, கார்ல் மார்க்ஸாகவோ, அம்பேத்கராகவோ அல்லது வேறு யாரேனும் ஒருவராகவும் இருக்கலாம். நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து! மனிதர்களுக்குத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றுத் தரக்கூடிய பாதையே உயரிய பாதையாக இருக்க முடியும். பௌத்தம் அத்தகைய பாதையாக இருப்பின் அதனை நாம் மதிக்கவும், பின்பற்றவும் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும், இங்கு பிரச்சினை என்னவெனில், எது உயரிய பாதை என்பதைக் கண்டறிவதேயாகும்! விடுதலை வேண்டுமெனில் அப்படிக் கண்டறியும் அந்த உயரிய பாதையை பின்பற்றுவதே சரியானதாக இருக்க முடியும். உலகில் நாம் ஏதேனும் ஆசிரியர், தத்துவவாதி அல்லது சித்தாந்தவாதிகளை அறிய நேரும்போது உற்பத்தி உறவுகள் (உழைப்புசார் உறவுகள்), சொத்துடைமை, செல்வம் மற்றும் ஏழ்மை குறித்தெல்லாம் அவர்களின் போதனைகள் என்ன கூறுகின்றன என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்கள் எந்த மக்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதை அதன் மூலம் கண்டறிய வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாவிட்டால், சமூகத்தில் நாம் எதையும் புரிந்துகொள்ள முடியாது. நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது. ஒரு ஆசிரியர் அல்லது தலைவர் சொல்லும் போதனைகளில் சரியானவற்றை ஏற்றுக்கொண்டு, தவறானவற்றை நாம் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சரியையும், தவறையும் ஒன்றுபோல் பாவிக்கத் தேவையில்லை. அது காதலோ அல்லது மரியாதையோ, எதையும் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.

View full details