Skip to product information
1 of 1

Kathiroli Pathippagam

நீதியா நியாயமா (கட்டுரைகள்)

நீதியா நியாயமா (கட்டுரைகள்)

Regular price Rs. 160.00
Regular price Sale price Rs. 160.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பேராசிரியர் மு. நாகநாதன் அவர்கள் எழுதி அண்மையில் (2013- நவம்பர்) வெளிவந்த நூலே நீதியா? நியாயமா? என்பதாகும். நூலின் முகப்பில் அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டுரைகள் எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நூலின் உள்ளே சென்றால் அவற்றோடு ஆட்சியியல், சட்டம், அறிவியல், விளையாட்டு, வரலாறு ஆகிய துறை களிலும் கட்டுரைகள் உள்ளன; ஜாலியன் வாலா பாக் படுகொலை- வெளிவராத உண்மைகள் என்னும் கட்டுரை முதல் பெரியார்சிலை: பாராட்டுக் குரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரை 25 கட்டுரை களை உள்ளடக்கி 194 பக்கங்களுக்கு நூல் விரிந் துள்ளது. முதற் கட்டுரையில் வெளிவராத உண் மைகள் இருப்பன போலவே அனைத்துக் கட்டுரை களிலும் பல வெளிவராத உண்மைகளும் புதுச் செய்திகளும் உள்ளன; நிரம்பத் தொடர்ந்து படிப்பவர்களும் அறிந்திராத செய்திகளும் உள்ளன; அவ்வப்போது வெளிவரும் நூல்களையும் மாத- வாராந்தர இதழ்களையும், குறிப்பாக இணைய தளத்தையும் நோக்குபவராக இருப்பதால்தான் எண்ணற்ற செய்திகளை ஆசிரியரால் வெளிக் கொணரப்பட்டுள்ளன எனலாம். நூலிலுள்ள எட்டுக் கட்டுரைகள் முதலாளித்துவச் சுரண்டலை, கள்ளத்தனமான கொள்ளையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அவை நம்மைத் திடுக்கிட வைக் கின்றன.

View full details