நீதிதேவன் மயக்கம்
ஆரியம் தனது ஆதிக்கத்தை வெகுஜன மக்களின் மனங்களில் இறைநம்பிக்கை என்ற பெயரில் புராண இதிகாசக் கதைகள் (புரட்டுக்கள்) வழியாக வேரூன்றச் செய்தது. அந்த வேர்களை, பகுத்தறிவு என்னும் கூர் அறிவாளால் வேரறுக்க போறிஞர் பெருந்தகை அண்ணா மேற்கொண்ட அறிவுப் போராட்டத்தின் வெளிப்பாடாக உருவானதே. 'நீதி தேவனின் மயக்கம் என்ற நாடக நூல்
அந்நாள் வரை கதாநாயகர்களாகவும், புராணம் போற்றும் புனிதப் பாத்திரங்களாகவும், கோயில்களில் நிறைந்திருக்கும் சிலைகளாகவும் இருந்த கோட்புலிநாயனார். விஸ்வாமித்திரர். துரோணாச்சாரி. பரசுராமன், அக்னி தேவள். இராமன் போன்றவர்களின்மீது கட்டமைக்கப்பட்டிருந்த இறைநம்பிக்கையாலாள புனிதப் பிம்பங்களை உடைத்து. உண்மை என்ன என்பதைத் தனது தனித்துவமான அறவியல் நோக்கோடு எழுத்து வடிவில் அமைத்துள்ளார் அண்ணா.
கவிச்சக்கரவர்த்தி எனப் புகழப்படும் கம்பனின் கம்பராமாயணத்தில் மறைக்கப்பட்டிருந்த கசடுகளையெல்லாம் நம் கண்முன்னே காட்சிப்படுத்துகிறார்.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.