Skip to product information
1 of 2

பாரதி புத்தகாலயம்

முரண்பாடுகளிலிருந்து கற்றல்

முரண்பாடுகளிலிருந்து கற்றல்

Regular price Rs. 40.00
Regular price Sale price Rs. 40.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

“Learning from conflicts” என்ற நூலின் ஆசிரியரான முனைவர்.கிருஷ்ணகுமார் அவர்கள் நாடறிந்த கல்வியாளர், டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றியவர். NCERT என்னும் தேசிய கல்வி ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் இருந்தவர். இந்நூலை தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் “எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க” என்னும் நூலின் மொழிபெயர்ப்பாளரும் ஆசிரியருமான ஐயா ஜே.ஷாஜகான் ஆவார்.

நூலின் மூல ஆசிரியரான பேரா.கிருஷ்ணகுமார் அவர்கள் ஒரு சுற்றுலாப் பயணமாக சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையின் பிரமாண்டமான தயாரிப்புக் கூடத்தைப் பார்த்துத் திரும்பும்போது, அந்த ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி பேராசிரியர் கிருஷ்ணகுமாரிடம் அவரின் பணி பற்றி கேட்கிறார். “கல்வியியலைக் கற்பிக்கிறேன்” என பேராசிரியர் கூறியதும் , அந்த ரயில்வே அதிகாரி ‘ஏன் நமது சமூகத்திற்குப் பொருத்தமான மாற்றங்களுடன் கல்வியைக் கற்பிக்கக் கூடாது?’ என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வியே கல்வியியல் சிக்கல்கள் குறித்து ஒரு விழிப்பை தனக்கு ஏற்படுத்தியதாகக் கூறும் பேராசிரியர் கிருஷ்ணகுமார் இந்த நூலிற்கு அடிப்படையாகவும் இந்த கேள்வியையே எடுத்துக் கொள்கிறார்.

இந்தக் கேள்விக்கான விடையை இரண்டு கோணங்களில் பெறலாம் என்கிறார் நூலாசிரியர். ஒன்று கல்வி முறைகள் பற்றியது, மற்றொன்று கல்வியின் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்குகள் பற்றியது. இரண்டாம் இலக்கு தெளிவானால் மட்டுமே முதல் இலக்கை எட்ட முடியும் என்கிறார். கல்வி எதிர்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்த பார்வையை, புரிந்துணர்வை விடவும் முரண்பாடுகள் தெளிவாக்குகின்றன என்பதன் அடிப்படையில் பேரா.கிருஷ்ணகுமார் எழுதிய நான்கு கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது.

View full details