Skip to product information
1 of 2

கிழக்கு பதிப்பகம்

அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை

அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை

Regular price Rs. 300.00
Regular price Sale price Rs. 300.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் அயோத்திதாசர் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை. சாத்தியமாகக்கூடிய அத்தனை கோணங்களிலும் அயோத்திதாசரை அணுகி, நுணுக்கமாக ஆராயும் இப்படியொரு நூல் வெளிவந்ததில்லை. அயோத்திதாசர் தனி மனிதரல்ல, ஒடுக்கப்பட்டவர்களின் சுயம். அடையாளமற்றவர்களின் ஆவேசம். நூற்றாண்டுகளாகத் தாழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குரலற்ற பெருந்திரளின் நமட்டுச் சிரிப்பு. அயோத்திதாசர் மீது படிந்திருந்த கனமான பண்டிதத் திரையை விலக்கி அவரை ஒரு மானுடராக வெளிப்படுத்தியதில் டி. தருமராஜின் பங்களிப்பு முதன்மையானது. அரசியல் கட்சிகள் தொடங்கி ஆய்வாளர்கள் வரை பலரும் அயோத்திதாசரைத் தங்களுடைய ஆதர்சமாக வரித்துக்கொண்டது அதற்குப் பிறகுதான்.

அயோத்திதாசரைக் கொண்டாடுதல் என்றால் ஒடுக்கப்பட்டதைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்டவன், ‘அனாதையாக வீழ்ந்து கிடக்கும் பிணம்’ என்று கருதுகிற தேசத்தில் இந்தக் கொண்டாட்டம் அவசியம்.

அவனுக்குத் தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவனே இந்த தேசத்தில் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும், ஒழுக்கத்திற்காகவும் போராடியவன். இன்று, சூழ்ச்சிகளின் மத்தியில் குற்றுயிராய்க் கிடக்கிறான் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

அநீதிகள் மலிந்த நாட்டில் நீதியைப் பேசுகிறவர்களே ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள் என்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. கல்வி செத்த நாட்டில் அறிவாளியே தீண்டத்தகாதவர். மொழி சிதைந்த ஊரில் அர்த்தம் தெரிந்தவர்களுக்கே பேச்சு வராது.

‘அயோத்திதாசர்’ என்றால் ஒடுக்கப்பட்டவனின் சுயம் என்று பொருள். ஒடுக்கப்படுதலை இவரை விடவும் வலிமையாய் கற்பனை செய்த சிந்தனையாளர் உலக வரலாற்றில் யாருமில்லை.'

View full details