திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்
எங்கேயோ மூலையில் ஒடுக்கப்பட்டும் ஒடிக்கப்பட்டும் முடங்கிக் கிடந்த மனிதவர்க்கத்தின் கடைக்கோடி மக்களின் நிலைகளைப் படிப்பவர் மனத்தில் பதிக்கும் வண்ணம் எழுதப்பட்டும், அவர்களும் மனிதர்களே என உணர்த்தப் பட்டும் மனித நேயத்தின் அடிப்படையை விளக்கும் வகையில் அமைந்துள்ள சிறுகதைகளின் படைப்பாளர்கள் திராவிட இயக்கத்தினரே என்றால் மிமையன்று. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பண்புகளின் வெளிப்பாடுகளாக இக்கதைகள் ஒளிர்வதை படிப்பவர்கள் உணர்வார்கள்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டினை முன்னிட்டு வெளியிடப் பெறும் இச்சிறுகதை தொகுப்பு வாசகர்களிடையே புதிய எழுச்சியையும், தமிழன்பர்களிடையே புதிய தாக்கத்தையும் உருவாக்கும் எண்ணத்தில் எமது பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். வாசக அன்பர்கள் படித்துப் பயனடைவார்கள் என நம்புகிறோம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்:
| Dravida Iyakka Ezhuthaalargalin Chirugathaigalபுத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.