Skip to content

டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும்

Save 25% Save 25%
Original price Rs. 90.00
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price Rs. 90.00
Current price Rs. 67.50
Rs. 67.50 - Rs. 67.50
Current price Rs. 67.50

திரு. மு. நீலகண்டன் திருவள்ளூர் மாவட்டம், ஆவடிக்கு அருகில் பாலவேடு என்னும் சிற்றூரில் 1.7.1948-இல் முனுசாமி – பட்டம்மாள் இணையர்க்கு மூன்றாம் மகனாகப் பிறந்தவர். பாலவேடு ஆதிதிராவிடர் நலப்பள்ளியிலும், பாலவேடு ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும் தொடக்க நடுநிலைக்கல்வி பயின்றார். சென்னை. ஜார்ஜ் டவுனில், டாக்டர் குருசாமி முதலியார் தொண்ட மண்டலம் துளுவ வேளாளர் பள்ளியில் உயர்நிலைக் கல்வி பயின்றார். சென்னை சர்.தியாகராயர் கல்லூரியில் PUC (கல்லூரி புதுமுக) வகுப்பு முடிந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் B.A., Eco. (கலையியம் இளையர் பொருளாதாரம்) / திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் M.A., His. (கலையியல் முதியர் வரலாறும்) / காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் M.Phil., (இளமுனைவர்) பட்டங்களைப் பெற்றார். டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள். கோட்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 33 வருடங்கள் பணியாற்றி, அரசு துணைச் செயலா- ளராக பணி நிறைவு பெற்றார். தன்னுடைய பணிக்காலத்தில் அரசு அலுவலர் நலச் சங்கங்கள். அரசுப் பணியாளர் கூட்டுறவு சங்கங்கள். சமூக நலச் சங்கங்கள் ஆகியவற்றில் பங்கு கொண்டு செயலாற்றியவர். தமிழ்நாடு எஸ்.சி. / எஸ்.டி. அலுவலர்நலச்சங்கத்தில் மாநில தலைமை நிலையச் செயலாளராகவும். மாநில பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர்.அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் வழிகாட்டியாக செயலாற்றுகிறார்.மேலும் இந்நூல் ஆசிரியர் தமிழில் “டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார சிந்தனை வரலாறு” மற்றும் ஆங்கிலத்தில் “Short History of Dr. Ambedkar” என்ற புத்தகாங்களை எழுதியுள்ளார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.