சமூக நீதிக்கான அறப்போர் நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம்
சமூக நீதிக்கான அறப்போர் : ஒடுக்கப்பட்டோர் வாசல்களில் அரசின் நிர்வாகம் - இந்திய அரசின் முன்னாள் செயலாளரோடு பி.எஸ்.கிருஷ்ணனோடு
ஆங்கிலத்தில் உரையாடியவர் வே.வசந்திதேவி /பதிப்பாசிரியர் : த.நீதிராஜன், தமிழாக்கம்: மு.ஆனந்தன் - பக்கங்கள் 560
நூற்றாண்டுகளாக தொடரும் சாதியத்திற்கு எதிரான ஆயுதமே இந்நூல். சகாரா பாலைவனப் பகுதியில் உள்ள ஆப்ரிக்க நாடுகளின் மக்கள் நிலைமையைவிட மோசமான வாழ்நிலைமையில் உள்ள தலித்துக்கள், பழங்குடிகள் மற்றும் நிலமற்ற ஏழை பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக 70 ஆண்டுக் காலம் அசுரத்தனமாக உழைத்திட்ட பி.எஸ்.கிருஷ்ணன் என்கிற மாமனிதருடன் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி அவர்களின் உரையாடல் இது. இந்தியாவை ஆற்றல்படுத்துவதற்காக ஒடுக்கப்பட்டோரை ஆற்றல்படுத்துவதற்கான செயல்திட்டமும் இதில் உள்ளது. மின் புத்தகமாகவும் அச்சுப் புத்தகமாகவும் கிடைக்கும்.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.