ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்
ஒரு பண்ணை அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் பி.எஸ். தனுஷ்கோடி அவர்கள் (1926 அக்டோபர் 13 - 1997 ஆகஸ்ட் 19). சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளானவர். இரண்டாம் வகுப்பு வரையே படித்த அவர், போராட்டத் தலைவராக உருவாகி, எத்தகைய சாதனைகள் புரிந்தார் என்பதை மக்கள் வரலாற்று ஆய்வாளர் என். ராமகிருஷ்ணன் அவர்கள் இதில் விளக்கியிருக்கிறார்.
உள்ளாட்சி அமைப்புகளின் தலைவராகவும் 1967இல் திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினராகவும் உயர்ந்தார். 1962இல் இந்திய - சீன எல்லை மோதல் நடைபெற்றபோதும், 1975இல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோதும் பாதுகாப்புச் சட்டப்படி தனுஷ்கோடி கைது செய்யப்பட்டார். மொத்தம் 9 வருடம் 9 மாதம் சிறையில் இருந்துள்ளார். 1 வருடம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். 72வது வயதில் இறுதிமூச்சு விடும் வரை, புரட்சிப் போராளியாக விளங்கிய தோழர் பி.எஸ்.டி சென்னையில் உயிர் நீத்தார். அடுத்த நாள் சொந்த ஊரான பாங்கல் மண்ணில் அவரது இறுதி யாத்திரைக்கு கண்ணீரோடு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் துயரம்தான் அவரது புகழ்மிக்க வாழ்வைப் படம் பிடித்து காட்டியது.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.