மனித இனக்குழு வரலாறும் ஆரியமும்
ஆரியக் குடியேற்றம் அல்லது படையெடுப்பு குறித்த பல்வேறு விவாதங்கள் இன்றளவும் தொடர்ந்து நடைபெறுகிறது, தமிழ்ச் சமூகத்தில் ஆரிய திராவிடக் கோட்பாடுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அரசியல் வெற்றிகரமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மேன்மைப்படுத்தியது, தந்தை பெரியார் திராவிட அரசியல் கோட்பாட்டை முன்னிறுத்தியது, ஆரியம் என்கிற இனக்குழுப் பெயரில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் மயமாக்களைத்தான் என்பதை அவரே பல முறை விளக்கி இருக்கிறார். அறிவியல் வழியிலான விவாதங்களில் இனக்குழு வரலாற்றை அணுகும் போது ஒரு எளிய உண்மையை நாம் திரும்பாத திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. அது, "ஆரியம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு இனவெறிக்கு குறியீடு, அது எளிய உழைக்கும் மக்களின் வாழ்வியலை மதம் மற்றும் பிறப்பின் வழியாகச் சுரண்ட நினைக்கும் மேட்டிமைக் கூட்டத்தின் அடையாளம்".
| Manitha Inakuzhu Varalarum Aariyamumபுத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.