Skip to content

இந்துத்துவத்தின் பன்முகங்கள் - ஆசிரியர் குறிப்பு

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
 
ஆசிரியர் குறிப்பு

அ.மார்க்ஸ்

அ.மார்க்ஸ், அக்டோபர் 4, 1949ல் பிறந்தார். அவரது தந்தை அந்தோணிசாமி. மலேசியாவில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். தலைக்கு விலை கூறப்பட்டுத் தப்பி வந்தபின் நாடு கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.

அ.மார்க்ஸ் 37 ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் அ.மார்க்ஸ் தமிழின் முதன்மையான தலித்திய மார்க்ஸிய கோட்பாட்டாளர்களில் ஒருவர். மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னின்று செயல்பட்டு வருபவர். மதவாத எதிர்ப்பு, சிறுபான்மை யினர் நலன் சார்ந்த விவாதங்கள் அ.மார்க்ஸின் முக்கியமான அக்கறைகளாக இருந்து வந்திருக்கின்றன. நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் செயல்பட்டிருக்கிறார்.

Previous article திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - ஆசிரியர் குறிப்பு