{"title":"இந்து தமிழ் திசை","description":null,"products":[{"product_id":"entrum-thamizhar-thalaivar","title":"என்றும் தமிழர் தலைவர்","description":"\u003cspan data-mce-fragment=\"1\"\u003eதமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை திசைதிருப்பிய பெரியார், பெரிதும் புரிந்துகொள்ளப்படாதவராகவே இருக்கிறார். அவரைக் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் அறிமுகப்படுத்தும் நூல் இது. 'இந்து தமிழ் திசை' வெளியிட்டுள்ளது.\u003c\/span\u003e | Entrum Thamizhar Thalaivar","brand":"இந்து தமிழ் திசை","offers":[{"title":"Entrum Thamizhar Thalaivar","offer_id":51622913737000,"sku":"BK321","price":450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/entrum-thamizhar-thalaivar.jpg?v=1756700683"},{"product_id":"thirunangaiyum-thirunambiyum","title":"திருநம்பியும் திருநங்கையும்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஒருவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறுவதும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறுவதும் நேற்று, இன்று நிகழ்ந்தவையல்ல. பரிணாம வளர்ச்சியில் மனித இனம் பல்வேறு மாற்றங்களுக்கு உள்பட்டது எவ்வளவு அறிவியல்பூர்வமானதோ அதைப் போன்றதுதான் திருநர் உடலில் நிகழும் மாற்றங்களும். தங்கள் அறிவுக்குப் புலப்படாத எதையுமே அச்சப்பட்டு ஒதுக்கிவைப்பது மனிதர்களின் இயல்பு. ஆரம்பத்தில் திருநர் சமூகத்தையும் இந்த உலகம் அப்படித்தான் அணுகியது. பேய் பிடித்துவிட்டது என்றும் மனநலக் குறைபாடு என்றும் தவறாகப் புரிந்துகொண்டு பலர் வினையாற்றியிருக்கிறார்கள். தங்களது உடல் - உள மாறுதல்களை இந்தச் சமூகத்துக்குப் புரிய வைக்க முடியாமல் அடையாளமின்றி அழிந்த திருநர்கள் ஏராளம். ஆனால், இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஆண் பால், பெண் பால் போலவே திருநர்களை மூன்றாம் பாலினமாக அரசு அங்கீகரித்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e | Thirunangaiyum Thirunambiyum","brand":"இந்து தமிழ் திசை","offers":[{"title":"Thirunangaiyum Thirunambiyum","offer_id":51622905839912,"sku":"BK127","price":152.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/thirunangaifs_1.jpg?v=1756700458"},{"product_id":"vidai-thedum-ariviyal","title":"விடை தேடும் அறிவியல்","description":"\u003cp\u003eஅறிவியலையும் அன்றாட வாழ்க்கையையும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் கூடாது.   - விஞ்ஞானி ரோசலிண்ட் ஃப்ராங்ளின்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஎங்கும் அறிவியல். எதிலும் அறிவியல். அறிவியல் இன்றி உலகம் இல்லை. அறிவியல் இன்றி எதுவும் இல்லை. அறிவியலுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏன், எதற்கு, எதனால், எப்படி என்று கேள்விகளைக் கேட்க வைப்பதும் அறிவியல். அந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடிச் செல்ல வைப்பதும் அறிவியல். தேடிய விஷயங்களைப் பரிசோதனைக்கு உள்படுத்துவதும் அறிவியல். அந்தப் பரிசோதனைகளின் இறுதியில் இதுதான் உண்மை என்கிற ஒரு முடிவுக்கு வருவதும் அறிவியல்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅறிவியல் சுவாரசியமானது. அந்த சுவாரசியத்தால்தான் கேள்விகள் பிறக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு விடைகளும் கிடைக்கின்றன. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அறிவியல் உண்மைகளைக் கண்டறியலாம்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e | Vidai Thedum Ariviyal","brand":"இந்து தமிழ் திசை","offers":[{"title":"Vidai Thedum Ariviyal","offer_id":51622905741608,"sku":"BK125","price":114.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/vidaifs_1.jpg?v=1756700456"},{"product_id":"peridhinum-peridhu-kael","title":"பெரிதினும் பெரிது கேள்","description":"\u003cdiv\u003e\u003cspan\u003eசக வயதினரோடு கூடி பழகுதல், குழுவாக இணைந்து ஓடி ஆடி விளையாடுதல், வகுப்பறையில் ஒன்று சேர்ந்து கற்றல் போன்ற இனிமையான அனுபவங்களை ஒருசேர தர வல்லது பள்ளிக்கூடம். ஆனால், பெருந்தொற்றினால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதினால் துளிர்களுக்கு இதில் சொல்லப்பட்ட  ‘கூடி’,  ‘இணைந்து’,  ‘சேர்ந்து’ போன்ற சொற்கள் அந்நியமாகிப் போயிற்று. இதன் பின்விளைவு என்னவென்பது, இரண்டாண்டுக்காலம் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூட கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டபோது அனைவருக்கும் உறைக்கத் தொடங்கியது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eசிறாரிடம் பல்வேறு நடத்தை சிக்கல்கள் ஆங்காங்கே தென்பட்டது. சிலர் கற்றலில் சறுக்கினர், சிலர் தன்னம்பிக்கை இழந்து தடுமாறினர், சிலரோ ஆசிரியர்களிடமே தகாத முறையில் நடந்து கொண்டனர், சிலர் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயத்திலிருந்தனர்...இப்படி பல. வயதில் பெரியவர்கள் பலரின் இயல்பு வாழ்க்கையை பெருந்தொற்று காலம் இடைமறித்தது என்றால் மாணவர்களின் வாழ்க்கையை அது தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003eஇந்நிலையில், மாணவர்களிடம் நற்சிந்தைகளை, நற்பண்புகளை, நன்னெறிகளை ஊட்ட வேண்டியது  ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பள்ளி நாளிதழான ‘வெற்றிக்கொடி’யின் தலையாயக் கடமை என்றுணர்ந்தோம். அதேவேளையில் போதனையாக அல்லாமல் ரசிக்கும்படியாக நற்சிந்தனைகள் கடத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தோம். காலா காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அறநெறிகள் இருப்பினும் அவற்றை எடுத்துரைக்கும் விதம் காலாவதியானதாக இருப்பின் பயனில்லை. அதுமட்டுமின்றி தற்காலத்தில் மாணவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு வழிகாட்டும் வகையிலும் எழுதப்பட வேண்டும் என்கிற சவாலையும் சமாளிக்க வேண்டி இருந்தது.  இவை அத்தனைக்கும் செறிவான வடிவம் கொடுத்து, ‘பெரிதினும் பெரிது கேள்’ தொடரை  ‘வெற்றிக்கொடி’ பள்ளி நாளிதழில் சிறார் எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான பிரியசகி எழுதியது பாராட்டுக்குரியது.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003c!----\u003e | Peridhinum Peridhu Kael","brand":"இந்து தமிழ் திசை","offers":[{"title":"Peridhinum Peridhu Kael","offer_id":51622905479464,"sku":"BK120","price":142.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0737\/1332\/0232\/files\/PERIDHINUMFS_1.jpg?v=1756700451"}],"url":"https:\/\/periyarbooks.com\/collections\/hindhu-thamiz-thisai.oembed","provider":"PeriyarBooks.Com","version":"1.0","type":"link"}