ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந் நாவலந் தீவை நண்ணிய ஆரியக் கூட்டத்தார் தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தாம் பேசுவது தேவ மொழி (தேவ பாஷை) என்றும், கூசாது பொய் கூறித் தம் வெளிர் நிறத்தானும் வெடிப்பொலிப் பேச்சானும் திரவிட அரசர்களையும் மக்களையும் மயக்கித் தம் கொலை வேள்விகளுக்குத் துணை பெற்றனர். தம் சிறு தெய்வ வழுத்துரைகளை வேதங்களாகக் கட்டமைத்துக் கொண்டனர். படிப்படியே திரவிட இனத்தவரை முற்றும் அடிமையாக்கிக் தம் வாழ்வியல் நிலைகளை வளப்படுத்திக்கொண்டனர். அரசரையும் அடிப்படுத்தும் வல்லதிகாரம் பெற்றனர்.
ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந் நாவலந் தீவை நண்ணிய ஆரியக் கூட்டத்தார் தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தாம் பேசுவது தேவ மொழி (தேவ பாஷை) என்றும், கூசாது பொய் கூறித் தம் வெளிர் நிறத்தானும் வெடிப்பொலிப் பேச்சானும் திரவிட அரசர்களையும் மக்களையும் மயக்கித் தம் கொலை வேள்விகளுக்குத் துணை பெற்றனர். தம் சிறு தெய்வ வழுத்துரைகளை வேதங்களாகக் கட்டமைத்துக் கொண்டனர். படிப்படியே திரவிட இனத்தவரை முற்றும் அடிமையாக்கிக் தம் வாழ்வியல் நிலைகளை வளப்படுத்திக்கொண்டனர். அரசரையும் அடிப்படுத்தும் வல்லதிகாரம் பெற்றனர்.
பாவலரேறு ஐயா அவர்களின் நூல்கள் தமிழியக் கொள்கை நோக்கின. தமிழ் மொழி, இன, நாட்டு உரிமைகளுக்காகப் போர்ப்பறை கொட்டுவன.
அவரின் எண்ண மும், எழுத்தும் தமிழனின் அடிமை நிலைக்கெதிராக ஓயாமல் அலைவீசிக் கொண்டிருப்பன. அறிவின் பெருநெருப்பாய், ஆற்றலின் சூறைக்காற்றாய் இருந்த ஐயாவின் பேரியக்கம், அவரின் படைப்புக்களுள் இன்றும் கனன்று கொண்டிருக்கின்றன.
விடுதலை விடாய்த் தணியாத ஐயாவின் எழுத்துகள் உணர்வு சான்றன, பொய்ம்மையைச் சாய்த்து மெய்ம்மையை நிறுவச் செய்வன, ஆரிய இருள் கிழித்துத் தமிழிய ஒளி பாய்ச்சுவன, ஆளுமை அரசை வீழ்த்தும் பொதுமை வாழ்வு நோக்கியன.
தேனிகண்ட தீந்தமிழ் நாவலர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் அண்ணா எனும் பல்கலைக்கழகத்திலும் பயின்ற சான்றோர்; வாய்மை நெறி பிறழா நேர்மையர்: ரயிலிலும் ஜெயிலிலும் இளமையின் பெரும் பகுதியைச் செலவிட்ட தியாகச் சுடர்; 'தம்பி வா! தலைமை ஏற்க வா!' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்; பாரதிதாசன் பாடல்களைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர்; குறளுரை கண்டவர்; மாண்புமிகு நிதியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அப் பெருந்தகைக்கும், நூல் உருவாக்கத்திற்குத் துணை புரிந்த திருமிகு சி. சுப்பிரமணியத்திற்கும் என் உளம் கனிந்த நன்றி.
தேனிகண்ட தீந்தமிழ் நாவலர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் அண்ணா எனும் பல்கலைக்கழகத்திலும் பயின்ற சான்றோர்; வாய்மை நெறி பிறழா நேர்மையர்: ரயிலிலும் ஜெயிலிலும் இளமையின் பெரும் பகுதியைச் செலவிட்ட தியாகச் சுடர்; 'தம்பி வா! தலைமை ஏற்க வா!' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்; பாரதிதாசன் பாடல்களைப் பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர்; குறளுரை கண்டவர்; மாண்புமிகு நிதியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அப் பெருந்தகைக்கும், நூல் உருவாக்கத்திற்குத் துணை புரிந்த திருமிகு சி. சுப்பிரமணியத்திற்கும் என் உளம் கனிந்த நன்றி.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் செந்தமிழ் நாட்டின் இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் கவிஞராகத் திகழ்ந்தார் என்பது பாரோர் போற்றும் புகழ்ச்சிக்குரிய மொழியாகும்.
புதுமைக் கவிஞர் பாரதியாருக்குப்பின், மக்கள் கவிஞர் என்று போற்றப்படும் பெருமைக்குரியவராக விளங்கியவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனே ஆவார்.
உலகில், சிலர் கவிஞர்களாகவே பிறக்கிறார்கள்; சிலர் கவிஞர்களாக ஆக்கப்படுகிறார்கள்; சிலர் கவிஞர்களாக விளம்பரப்படுத்தப்படுகிறார்கள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முதல்வகையைச் சேர்ந்தவர்; கவிஞராகவே பிறந்தவர்.
தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும். திருக்குறள் திருவள்ளுவர் என்னும் பழந்தமிழ்ப் பெரியாரால் செய்யப்பட்டது; தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய இன்றியமையாச் சிறப்பினையுடையது. வள்ளுவர் குறளைப் படிப்போர், வள்ளுவர் காலநிலை, வள்ளுவர் நூல் செய்த முறை, திருக்குறளின் பெருமை, பொருள் கொள்ளுமுறை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும். திருக்குறள் திருவள்ளுவர் என்னும் பழந்தமிழ்ப் பெரியாரால் செய்யப்பட்டது; தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் படித்துப் பயன்பெற வேண்டிய இன்றியமையாச் சிறப்பினையுடையது. வள்ளுவர் குறளைப் படிப்போர், வள்ளுவர் காலநிலை, வள்ளுவர் நூல் செய்த முறை, திருக்குறளின் பெருமை, பொருள் கொள்ளுமுறை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரைகளை நான் சிந்தனையாளன் ஏட்டில் எழுதிய போது அதை ஆர்வமாக படித்துப் பார்த்து, தொடராக வெளியிட்டு உதவிய சிந்தனையாளன் ஏட்டின் ஆசிரியரும் ‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி’யின் அமைப்புக் குழுச் செயலாளருமான தோழர் வே. ஆனைமுத்து அய்யா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைகளை நான் சிந்தனையாளன் ஏட்டில் எழுதிய போது அதை ஆர்வமாக படித்துப் பார்த்து, தொடராக வெளியிட்டு உதவிய சிந்தனையாளன் ஏட்டின் ஆசிரியரும் ‘மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி’யின் அமைப்புக் குழுச் செயலாளருமான தோழர் வே. ஆனைமுத்து அய்யா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.